Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனைவியுடன் கள்ளத்தொடர்பால் ஆத்திரம்: இளைஞரை கொன்று புதைத்த கணவன் சிறையிலடைப்பு

நவம்பர் 05, 2020 05:54

காஞ்சிபுரம்: எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் மனைவியிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞர் அடித்துக்கொலை கொலை செய்யப்பட்டார். ஜே.சி.பி. இயந்திரம் மூலமாக பத்தடி ஆழத்தில் அவரை புதைந்த கணவரை போலீஸார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தான்தோன்றித்தனமாக ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் தினேஷுக்கும் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (43) என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

இதனால் தினேஷை ரவிச்சந்திரன் மற்றும் அவர்களது உறவினர்கள் கண்டித்தனர். ஆனாலும், இருவருக்கும் இடையேயான கள்ளக்காதல் தொடர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆத்திரத்திலிருந்த ரவிச்சந்திரன் வீட்டிற்கு மீண்டும் வந்த தினேஷிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது தொடர்ந்து ரவிச்சந்திரன் உருட்டுக்கட்டையால் தினேஷின் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு தினேஷின் உடலை காரை கிராமத்தின் அருகே உள்ள மோட்டூர் ஏரியில் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியோடு 10 அடி பள்ளம் தோண்டி தினேஷின் உடலைப் புதைத்துள்ளார்.

அதன் பிறகு வழக்கறிஞருடன் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்த ரவிச்சந்திரன் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ரவிச்சந்திரனை கைது செய்த தாலுக்கா போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மனைவியுடன் கள்ளக்காதலால் 19 வயது இளைஞரை அவரது கணவர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து ஏரியில் 10 அடி பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்